Date: 2026-07-29 | Department: Anti-Drug Club
மதி தா இந்து கல்லூரியில் போதை அரக்கன்என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம்
மதி தா இந்துக்கல்லூரியில் போதை அரக்கன் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் பொது நலத்திற்குமான அச்சுறுத்தல் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு செயலர் ஏ எல் எஸ் கருத்தரங்க அறையில் நடைபெற்றது. நிகழ்விற்கு ம. தி.தா இந்து கல்லூரி முதல்வர் முனைவர் கு பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி தலைமை உரை ஆற்றினார். மேக்ஸ் ஜோன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் டாக்டர் டொமினிக் ஆன் டனி சிறப்புரையாற்றினார். முன்னதாக போதை தடுப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் தாவரவியல் பேராசிரியர் கா சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேரா பிச்சம்மாள் நன்றியுரை ஆற்றினார். கருத்தரங்க நிகழ்வுகளை தமிழ்த்துறை பேராசிரியர் எஸ் ராமலட்சுமி தொகுத்து வழங்கினார். கருத்தரங்க நிகழ்வில் பேரா பரமசிவம் பேரா அருண், பேரா பகத் சையத் இப்ராகிம், பேரா இசக்கியப்பன், பேரா செல்வம், பேரா சையத் அலி நிசாயா, பேரா அனிதா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போதை தடுப்பு மன்ற தன்னார்வல மாணவர்கள் கலந்து கொண்டனர்.